மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 15.07.2025க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 வில் குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு 2 மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இராயபுரத்தில் உள்ள கால்நடை காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், சாலை வெட்டு சீரமைப்புப் பணிகள், குளம் தூர்வாருதல் மற்றும் ஏரி புனரமைப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இராயபுரம் மண்டலத்தில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று திறந்து வைத்து, பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 21 நீர்வழிக்கால்வாய்களில் ரூ.211.86 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைத்தும், உயர்த்தியும், வலையுடன் கூடிய சங்கிலி வேலி அமைத்தும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று (26.06.2025) நடைபெற்ற சாலையோர வியாபாரிகள் தேர்தலில் மண்டலம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்