தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம் 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025௲ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1)(i-a)ன்படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (18.07.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இன்று (16.07.2025) பெருநகர சென்னை மாநகராட்சியின் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. மு.மகேஷ் குமார் அவர்கள், 169ஆவது வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் அடையாறு மண்டலத்தில் கட்டப்பட்ட காந்தி மண்டபம் பேருந்து நிறுத்தத்தினையும், சி.ஐ.டி.நகர் 70அடி சாலையில் ரூபாய் 16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த்தினையும் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (17.07.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று (15.07.2025) தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் 7 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தேனாம்பேட்டை மண்டலம், 114ஆவது வார்டில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினைப் பார்வையிட்டு மக்களிடம் கலந்துரையாடினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (16.07.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் மற்றும் கழிவுகளை முதன்முறையாக நவீன சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் அகற்றி தூர்வாரும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்புப் பணியினை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.07.2025 அன்று முதல் அக்டோபர் மாதம் வரை ஒவ்வொரு வார்டிலும் 2 வீதம் மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் 400 முகாம்கள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.07.2025 முதல் 14.08.2025 வரை 109 “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகிறது.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வார்டு-169 தாதண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இன்று (13.07.2025) தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணியினைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (12.07.2025) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74 ல் குழந்தைகள் மையக் கட்டடம், பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்