நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்காண்டு சாதனை புகைப்படக் கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் இன்று பார்வையிட்டனர்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடம், சமூக நலக்கூடம் மற்றும் கால்வாய் புனரமைப்பு, Eco Blocks மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலத்தில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட பூங்கா இருக்கைகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று வழங்கினார்கள்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் எளிதில் அணுகக்கூடிய நகர்ப்புர உட்கட்டமைப்பிற்கான பாலினம் உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுக்கான கையேட்டினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று வெளியிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் மேலாண்மை, சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேளிக்கை வரி சட்டம் 2017-ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் 01.07.2017 முதல் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கேளிக்கைகள் வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 24/2025), பிரிவு 2 (8) மற்றும் 3 (10) கீழ் பின்வருமாறு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 17.04.2025 முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாவட்ட அரசிதழ் எண்.172 ௲ன் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் அல்லது ஓட்டேரி மயானபூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு இலட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் நிகழ்வினைத் தொடங்கி வைக்கும் விதமாக, மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தலைமையில் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (04.06.2025) நடைபெற்றது.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கோடம்பாக்கம் மண்டலம், வடபழனி, அம்மன் கோவில் தெருவில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்காவினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட நேர்மை நகர் மயானபூமியின் தகனமேடையில் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தாங்கல் மயானபூமியினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருவொற்றியூர் மண்டலம், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை இருப்புப் பாதை வழியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இரயில்வே மேம்பாலத்தின் மாற்றுப் பாதையான எர்ணாவூர் பாலம் மற்றும் மாட்டு மந்தை பாலம் ஆகியவற்றை பயன்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.