இன்று (05.09.2026) தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர் திரு.கே.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மற்றும் வளர்ச்சிப் பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் இந்து மயான பூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் வேலங்காடு, அரும்பாக்கம் மற்றும் ஜி.கே.எம். காலனி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சாரப் பேரணியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் நலனுக்காக மனநல மேம்பாட்டிற்கான நல மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிகி, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் முன்னோட்டமாக 11 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் இன்று மேற்கொள்ளப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தொடர்புடைய சேவைத்துறை அலுவலர்களுடன் இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஆதம்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் திரு. அஃதாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கைப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (29.08.2026) 74 இடங்களிலிருந்து 25.2 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.