பெருநகர சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு-2027னை முன்னிட்டு, முதற்கட்டமாக சுய கணக்கெடுப்பு 17.07.2026 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருமளவு திடக்கழிவுகள் உருவாக்குபவர்கள் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமானக் கழிவுகள் என முறையாக தரம்பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சூரிய ஒளி சக்தி பயன்பாடு, சுற்றுசூழல் மேம்பாடு, மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்துதல் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்களுடன் உலக வங்கி குழுமத்தின் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று (22.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள், ரிப்பன் கட்டடத்தில் உள்ள நகரத் திட்டமிடல் அலுவலகத்திற்கு திட்ட அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பத்தின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, திட்ட அனுமதியினை தாமதமின்றி வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் முக்கிய தூய்மைப் பணியாளர்களுக்கான (Core Sanitation Workers) நலத்திட்ட முகாம் இன்று (22.07.2026) நடைபெற்றது.
அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவொற்றியூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், பெரம்பூர், முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவினை (STEM Park) சென்னை பள்ளி மாணவர்களுடன் இன்று பார்வையிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், எழும்பூர் மகப்பேறு மருத்துவனைக்கு முன்புறம் உள்ள பாந்தியன் சாலையில், நடைபாதை விற்பனை கடைகள் தடைசெய்யப்பட்ட பகுதியில், நடைபாதை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் காவல் அலுவலர்களுடன் 18.07.2026 அன்று அகற்றப்பட்டது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு-2027, பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று (17.07.2026) ஒரு நாள் மட்டும் 16922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்துள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (18.07.2026) 132 இடங்களிலிருந்து 33.74 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்களிடமிருந்து நிலுவை சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் 03.07.2026 முதல் 16.07.2026 வரை ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2 கட்டடங்கள் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் சென்னை மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 1863 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்களை அப்புறப்படுத்தி - அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.