திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட தாங்கல் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் நேர்மை நகர் மற்றும் ஜி.கே.எம். காலனி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் 3 கல்லூரிகளைச் சார்ந்த 837 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை இன்று வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுக் கழிப்பிட மேலாண்மைத் திட்டத்தின் கீழ், இதுவரை 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்புகளைப் பராமரித்திட பெருநகர சென்னை மாநகராட்சியால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் பெருநகர சென்னை மாநகராட்சியானது இதன் உட்கட்டமைப்புகளைப் பராமரித்து தனது மேம்பட்ட சேவையினை வழங்கிடும்.
பெருநகர சென்னை மாநகராட்சி. தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் வடிகால் பராமரிப்பு, சுகாதாரம் & பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அடையாறு மண்டல த்தில் ரூ.40.42 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினைத் திறந்து வைத்து, ரூ.12.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.14.63 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்,
இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ரூ. 85.60 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை தத்தெடுத்து பராமரித்திட சம்பந்தப்பட்ட பகுதிகளின் வட்டார துணை ஆணையாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (01.02.2026) நடைபெற்ற மெரினாவில் கலைவிழா நிகழ்ச்சியில் ரஷியா நாட்டின் கலைஞர்கள் பங்கேற்ற ரஷியா நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஜனவரி 2025 முதல் 29.01.2026 வரை 4 இலட்சம் மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத 3,131 நபர்களிடமிருந்து ரூ.1.57 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.