தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று (15.04.2026) நடைபெற்றது. இதில் பெரம்பூர் மற்றும் ஆர்.கே. நகர் பயிற்சி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (14.04.2026) சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3,67,000/- ரொக்கப் பணம் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இரயில்வே காவல் படையினர் மேற்கொண்ட சோதைனையின்போது, ரூ.52,83,257/ மதிப்பிலான ரொக்கப் பணம், தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, நாளை (15.04.2026) ஒரு நாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னைப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் ௲ 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 11 இலட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு செல்பேசியில் தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய வாட்ஸ்அப் செய்தி அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 3000 ஆட்டோக்களில் விழிப்புணர்வு விளம்பரம் வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில், எண்.20 ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் தலைமையில் வேட்பாளர்களுடனான தேர்தல் செலவினம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், மூத்த குடிமக்கள் (85+) மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான அஞ்சல் வாக்குப்பதிவு வருகின்ற 16.04.2026, 17.04.2026 மற்றும் 18.04.2026 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேளச்சேரி, பீனிக்ஸ் மாலில் (Phoenix Mall) வாகனங்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,தேர்தல் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் திடீர் குழு நடனம் (Flashmob) மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு இன்று (12.04.2026) வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிப்பு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரிப்பன் கட்டடம், எழிலகக் கட்டடம், அண்ணாசாலை மற்றும் கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் இராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
இன்று (10.04.2026) சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.23,08,389/- ரொக்கப் பணம் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026-னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான (Ballot Unit) முதல் துணை சமவாய்ப்பிற்கு உட்படுத்தும் நிகழ்வு (First supplementary Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களான லயோலா கல்லூரி, இராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/’மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு 12.04.2026 அன்று முதல் 18.04.2026 வரை வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்/’மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
இன்று (09.04.2026) சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,51,750/- ரொக்கப் பணம் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ௲ 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட எண்.20 ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.பவன் லால் மீனா, இ.வ.ப., (Mr. Bhavan Lal Meena, I.R.S.,) (கைபேசி எண். 89258 19472) அவர்களை, தினசரி, காலை 9 மணி முதல் 10 மணி வரை அறை எண்.306, 2வது தளம், தமிழ்நாடு அரசினர் விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 002 என்ற முகவரியிலும்,
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத்தை விடுவிக்கக் கோரி 113 மேல்முறையீடுகள் பெறப்பட்டு, இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 98 மேல்முறையீடுகளில் ரூ.1,66,75,283/- விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 06.04.2026 வரையிலான வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்