பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்களிடமிருந்து நிலுவை சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் நாளை 03.07.2026 முதல் 17.07.2026 காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது
தேனாம்பேட்டை மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓட்டேரி நல்லா கால்வாயில் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் அண்ணாநகர் கோபுர பூங்காவில் ரூ.7.28 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் கணேசபுரத்தில் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பள்ளிக் கட்டடங்கள், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம், புதிய மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மழைநீர் வடிகால் துறையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இயற்கை சார்ந்த வழிமுறைகளில் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் சேகரிப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சிப் பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல், சென்னை திருவல்லிக்கேணி மாவட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களான (D-1, D-1X, D-2, D-2X, D-6, F-1, F-1X, F-2, F-2X, F-3X & F-4X) மற்றும் ஜே - 13 சென்னை தரமணி காவல் நிலைய பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 717 எண்ணிக்கையிலான வாகனங்களை அப்புறப்படுத்தி - அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சமூகத்தின் சம உரிமைகளுக்காகவும், பாலின விழிப்புணர்வுக்காகவும் உலகம் முழுவதும் ஜூன் மாதம் கொண்டாடப்படும் பெருமை மாதம் (Pride Month) 2026னை முன்னிட்டு, ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்திட்டார்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட தெலுங்கு காலனி மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்கள் சாஸ்திரி நகர், முத்துமாரியம்மன் கோயில் தெரு மற்றும் தண்டையார்பேட்டை சீதாராம் நகரில் உள்ள மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முதற்கட்டமாக ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் 94 முக்கிய சாலை சந்திப்பு வளைவுகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 600 சாலை சந்திப்பு வளைவுகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனாம்பேட்டை மண்டலத்திற்குப்ட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 54 எண்ணிக்கையிலான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு ரூ.2,29,800/- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், மழைநீர் வடிகால்வாய் பணிகள், குளங்கள் கால்வாய்கள் தூர்வாருதல், வெள்ளத் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டுதல் உள்ளிட்ட வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதர வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சாஸ்திரி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள்திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பெராகா சாலையில் (Beraka Road) தூய்மைப் பணி மேற்கொண்டிருந்த பொழுது தரையில் கண்டெடுத்த3 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள் திருமதி கார்த்திகா மற்றும் திருமதி கலைச்செல்வி ஆகியோர்களின் நேர்மையினைப் பாராட்டி தூய்மைப் பணியாளர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 28.06.2026 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது.
மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எம். தண்டபாணி அவர்கள், திரு.வி.க. பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பினைஇன்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ.மரியவில்சன் அவர்கள், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ.மரியவில்சன் அவர்கள், தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் இரயில்வே 2ஏ சந்திக்கடவில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியினை இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.06.2026) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (Chennai Intelligent Transport Systems project) திட்டம் “மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம்போக்குவரத்து மேலாண்மையில் புதிய பரிமாணம்”