சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், பெருநகர சென்னை காவல் ஆணையாளர் திரு.அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் காவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி-ரேபிடோ நிறுவனம் இணைந்து மாபெரும் இருசக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.
மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் நேர்மையான மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., அவர்கள், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, தேர்தல் நாளான வருகின்ற ஏப்ரல் 23 அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக சென்னை மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச வாகன வசதிகளைப் பெற Saksham App மூலமாகவும், மாவட்ட தகவல் மையத் தொடர்பு எண் 1950 அல்லது மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுபாட்டு அறை எண் 1800-425-7012 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பயனடையலாம். மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 22,248 காவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்காளர்களின் வசதிக்காகவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்திடும் வகையிலும் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது இந்த குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு இன்று மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று (17.04.2026) சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.6,16,600/- ரொக்கப் பணம் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது
சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட இட்லி விழிப்புணர்வு கண்காட்சி இன்று மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை காவல் ஆணையர் திரு. அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (16.04.2026) சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10,84,050/- ரொக்கப் பணம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னம் உள்ளடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் 21.04.2026, 22.04.2026, 23.04.2026 (வாக்குப்பதிவு நாள்), 04.05.2026 (வாக்கு எண்ணிக்கை நாள்) ஆகிய நாட்களில் மூடப்படும்.சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான தபால் வாக்குப்பதிவு இன்று (16.04.2026) தொடங்கி நடைபெற்றது.