அம்பத்தூர் மண்டலத்தில் ரூ.36 இலட்சம் மதிப்பில் சிவா விஷ்ணு குளம் புனரமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று (22.07.2024) இரவு 10 மணி முதல் பேருந்து சாலைகளில் தீவிரத் தூய்மைப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரு நாளில் மூன்று மண்டலங்களில் உள்ள பேருந்து சாலைகளில் நடைபெற்ற தீவிரத் தூய்மைப் பணிகளில் 201.01 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டன.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தொடர்ந்து சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் ரூ.1 கோடியே 54 ஆயிரம் மதிப்பிலான கடற்கரை தூய்மை செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வடசென்னை பகுதிகளில் சென்னை மெட்ரோ இரயில் பணிகள் நடைபெறும் இடங்களில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்று வழியில் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பின்படி, 2024-25ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள் தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.