பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் மாதவரம் மண்டலங்களில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.56.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வில்லிவாக்கம் ஏரியில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய, நீர்நிலை, கண்ணாடி தொங்கும் பாலம் மற்றும் 8.5 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் குளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 27.05.2026 முதல் 09.06.2026 வரை 15,710 மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத 338 நபர்களிடமிருந்து ரூ.16.08 இலட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து தெருமின்விளக்குகளும் 100% ஒளிர்வதை கண்டறிவதற்கான களஆய்வு 15.06.2026 அன்று மாநகராட்சி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒளிராத மின்விளக்குகள் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 12.05.2026 முதல் 09.06.2026 வரை சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு ரூ.2.45 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், கண்ணகி நகர் நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் மருத்துவர்கள் வருகை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகர மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்/ மாநகராட்சி துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), திருமதி சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படவுள்ளதையொட்டி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்த தேவையான மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் பட்டியல் தயார் செய்தல் தொடர்பாக, தொடர்புடைய துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (10.06.2026) நடைபெற்றது.
கண்ணகில் நகர் நகர சமுதாய சுகாதார மையத்தில் 3 மருத்துவர்கள், 8 செவிலியர்கள், 2 மகப்பேறு உதவியாளர்கள், 2 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், 1 மருந்தாளுர், 1 ஆயா, 10 பெண் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 2,090 பேருக்கு
ரூ.72.03 இலட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை இன்று வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள், அண்ணாநகர் மண்டலத்தில் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்ட செயல்பாடுகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள், இலவச ஒப்பனை அறைகள் பராமரிப்பு, ஆலந்தூர் மண்டலத்தில் நடைபாதை மற்றும் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரைப் பகுதியில் தேவையான மின் விளக்குகள் அமைத்தல், பாதுகாப்பு நடவடிக்கைத் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.