மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில்
ரூ. 27.50 கோடி மதிப்பீட்டில் 30 இலட்சம் கொள்ளளவு திறனுடன் அமைக்கப்பட்டு வரும் நீர்த்தேக்கத் தொட்டிகளில், முதற்கட்டமாக கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தனர்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ், டான்பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 75 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளை இன்று வழங்கினார்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 54, 55, 56, 57, 59 மற்றும் 60ஆவது வார்டுகளில் உள்ள 16 தெருக்களில் ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “The Bystander Action” - பார்வையாளர் தலையீடு குறித்த பயிற்சி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், கோடம்பாக்கம் மண்டலம், ராதாகிருஷ்ணன் தெருவில் ரூபாய் 2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினை இன்று திறந்து வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், மாநகராட்சியின் சார்பில் 23 எண்ணிக்கையிலான புதிய வாகனங்களைப் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அடையாறு மண்டலத்தில், சாஸ்திரி நகரில் ரூபாய் 33.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்தார்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற "மக்கள் முதல்வரின் மனிதநேய விழா"-வினை முன்னிட்டு, 1800 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான (Nodal Officers) கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.