கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 141க்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று (07.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் 15.07.2025 அன்று 6 வார்டுகளிலும் தொடங்கி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தன்னார்வலர்கள் மூலமாக இந்த 6 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று 13 அரசு துறைகளின் வாயிலாக 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (07.07.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை (07.07.205) இந்த 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்குகிறது.
சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0வின் ஒரு பகுதியாக, சென்னை பள்ளிகளில் பயிலும் 900 மாணவர்கள் பங்கேற்ற கழிப்பறை குறித்த பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகள் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகள் மற்றும் நீல வண்ணக்கொடி கடற்கரை சான்றிற்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியவுள்ள முதுநிலை மருத்துவர்களுக்கான சுகாதாரச் செயல்பாடுகள் குறித்த பயிற்சியினை இன்று தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 15.07.2025க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 வில் குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு 2 மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இராயபுரத்தில் உள்ள கால்நடை காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.