மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கவுள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வருகின்ற 12.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் 2,040 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை இன்று வழங்கினார்.
சென்னை மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 தொடர்பாக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 8 கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நடைபயணம் (Walkathon) இன்று (09.02.2026)நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களளின் வருகின்ற 12.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்,
இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (08.02.2026) நடைபெற்ற மெரினாவில் கலைவிழாவில் தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ள (437 இடங்களில்) “நம் கழிப்பறை நம் பொறுப்பு” என்ற பிரச்சாரக் கருப்பொருளில் மக்களுடனான கருத்துக்களை கலந்தாலோசிக்கும் சமூகக் கூட்டம் இன்று (08.02.2026) நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 2,165 நபர்களிடமிருந்து 858.40 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இன்று (07.02.2026) ஒரு நாள் மட்டும் 60 இடங்களிலிருந்து 47.75 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களுடனான கருத்துக்களை கலந்தாலோசிக்கும் சமூகக் கூட்டம் நாளை (08.02.2026) நடைபெறுகிறது.
திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட தாங்கல் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் நேர்மை நகர் மற்றும் ஜி.கே.எம். காலனி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் 3 கல்லூரிகளைச் சார்ந்த 837 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை இன்று வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுக் கழிப்பிட மேலாண்மைத் திட்டத்தின் கீழ், இதுவரை 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்புகளைப் பராமரித்திட பெருநகர சென்னை மாநகராட்சியால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் பெருநகர சென்னை மாநகராட்சியானது இதன் உட்கட்டமைப்புகளைப் பராமரித்து தனது மேம்பட்ட சேவையினை வழங்கிடும்.
பெருநகர சென்னை மாநகராட்சி. தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் வடிகால் பராமரிப்பு, சுகாதாரம் & பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அடையாறு மண்டல த்தில் ரூ.40.42 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினைத் திறந்து வைத்து, ரூ.12.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.14.63 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்,
இன்று ஆய்வு மேற்கொண்டார்.