சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4079 வாக்குச்சாவடிகளிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் திருநங்கைகளுக்கு பேரிடர் அபாய குறைப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் மாநகராட்சியின் 19 மருத்துவமனைகளுக்கு ரூபாய் 89.72 இலட்சம் மதிப்பிலான மருத்துவ கருவிகளை வழங்கினார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், சென்னை பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவில் கலந்து கொண்ட6,236 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.35.70 இலட்சம் மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை இன்று வழங்கினார்.
தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் 26.12.2025 முதல் சென்னை மாநகராட்சி இணையதளத்தின் மூலம் கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை, வார்டு-139, கங்கை அம்மன் கோவில் தெரு மற்றும் வார்டு 142, மேற்கு ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் கூடத்தினை திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 979 இடங்களிலும் 23.12.2025 முதல் 18.1.2026 வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்து படிவங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் கூடத்தினை திறந்து வைத்தார்.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், வடபெரும்பாக்கத்தில் ரூ.22.41 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தினை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், குருநானக் கல்லூரி அருகில் உள்ள வேளச்சேரி மயானபூமியில் ரூபாய் 6.85 கோடி மதிப்பீட்டில் நவீன மயானபூமி கட்டுமானப் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இன்று நேரில் சென்றுப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயபுரம் மண்டலம், பேரக்ஸ் தெரு, மைதானத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.54 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம், கைப்பந்து ஆடுகளம் கூடை பந்து ஆடுகளம் மற்றும் புனர்மைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து இன்று வைத்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 1,480 நபர்களிடமிருந்து 540.8 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இன்று (20.12.2025) ஒரு நாள் மட்டும் 97 இடங்களிலிருந்து 35.33 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத புதிய வாக்காளர்கள் மற்றும் 01.01.2026 மைய நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக வரும் 20.12.2025 மற்றும் 21.12.2025 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இருநாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு, இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.12.2025) வெளியிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (20.12.2025) நடைபெறவுள்ளது.