மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (14.12.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 1,05,556 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 2,930 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 1,197 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 1,383 நபர்களிடமிருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இன்று (13.12.2025) ஒரு நாள் மட்டும் 95 இடங்களிலிருந்து 34.42 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்காக 13.12.2025 மாலை 6 மணி முதல் 14.12.2025 மாலை 6 மணி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மாநகராட்சியின் இணையதள சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஜனவரி 2025 முதல் 12.12.2025 வரை 3.51 இலட்சம் மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம் மற்றும் விழிப்புணர்வு நடைபயணத்தை (Walkathon and Sand Art Installation) மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் www.chennaicorporation.gov.in மாநில தரவு மையம் (SDC) மற்றும் Cloud சூழலுக்கு மாற்றும் பணிகளின் ஒரு பகுதியாக, தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, நாளை (13.12.2025) சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (14.12.2025) மாலை 6.00 மணி வரை மாநகராட்சியின் இணைய சேவைகள் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 743 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட சேது பாஸ்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (13.12.2025) நடைபெறவுள்ளது.
மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடம், மாநகராட்சியின் அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து இன்று (12.12.2025) இடித்து அகற்றப்பட்டது.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு,வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 567 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பனந்தோப்பு இரயில்வே காலனி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்கள் 12.12.2025, 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய மூன்று நாட்களுக்கு 8 இடங்களில் நடத்தப்படவுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்புப் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (11.12.2025) தொடங்கி நடைபெற்றது.
தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118ல் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக சாலையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த கண்டெயினர் மாநகராட்சி அலுவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 48.41 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி 100.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பேரறிஞர் அண்ணா பெயரில் 18.12.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள கொளத்தூர், ஜி.கே.எம் காலனியில் ரூ.25.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடத்தின் இறுதிக்கட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.