தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (18.09.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட மாஞ்சோலை மயானபூமியில் ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள் இன்று (16.09.2025) தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (17.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் இன்று (16.09.2025) தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வார்டு-74க்குட்பட்ட புதிய வாழைமா நகர் மற்றும் செல்வபெருமாள் கோயில் தெருவில் நடைபெற்று வரும் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து இன்று (16.09.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (16.09.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து வகை வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்படுத்தும் பணி இன்று (15.09.2025) மேற்கொள்ளப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களின் தலைமையில் இன்று (12.09.2025) நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (13.09.2025) நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய சொத்துவரியினை, சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர 15.09.2025 முதல் 22.09.2025 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மாண்டிசோரி பயிற்சி பெற்ற பெருநகர சென்னை மாநகராட்சியின் 33 மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (12.09.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஜி.கே.எம். காலனி-பட்டுமேடு மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் மற்றும் தாங்கல் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (11.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (10.09.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், சென்னை பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.