மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் வருகின்ற 21.10.2025 அன்று (செவ்வாய்க்கிழமை) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் வருகின்ற 21.10.2025 அன்று (செவ்வாய்க்கிழமை) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், ரூ.34.90 இலட்சம் மதிப்பில் பெரம்பூர் நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி பூங்கா அருகில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணியினையும், புதிதாக கட்டப்படவுள்ள மன்றக் கூடத்திற்கான இடத்தினையும் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக சேவைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று (16.10.2025) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க. நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விக்டோரியா பொது அரங்கம் புனரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த 19.07.2025 முதல் 11.10.2025 வரையிலான நாட்களில் 1 இலட்சத்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினை இன்று (14.10.2025) தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (13.10.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (12.10.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை வீட்டு வாசலில் சேகரிக்கும் சேவை இன்று (11.10.2025) நடைபெற்றது.
இன்று (11.10.2025) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள், அம்பத்தூர் மண்டலம், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் மில்லினியம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து, ரூபாய் 93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இறகுப் பந்து விளையாட்டு மைதானத்திற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.