ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.பவன் லால் மீனா, இ.வ.ப., (Mr. Bhavan Lal Meena (IRS (C & CE)) அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி ஐ.வளர்மதி அவர்கள் முன்னிலையில், காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (19.03.2026) தேனாம்பேட்டை மண்டல அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விக்டோரியா பொது அரங்க கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் 16.03.2026 முதல் 18.03.2026 வரை 3 நாட்களில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,94,92,820/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்று (17.03.2026) முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ. 34,59,880/- ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்க உரிமையாளர்கள், நகை அடகு தொழில் செய்வோருக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும் வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ௲ 2026னை முன்னிட்டு, ரிப்பன் கட்டடத்தில் உள்ள சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் ஊடக கண்காணிப்பு மையம், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்று (16.03.2026) முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.3 இலட்சம் பணம் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் ௲ 2026 அறிவிப்பினைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் - 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு வீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து இன்று (15.03.2026) புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான (Nodal Officers) கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.