மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள், எம்.கே.பி. நகர், மத்திய நிழற்சாலையில் கட்டப்பட்டுள்ள சறுக்கு விளையாட்டு மைதானத்தினை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Guidelines for Clean and Safe Construction
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி, வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்யும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத் தீர்மானத்தின்படி தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக (TEXCO) நிறுவனத்தின் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டு 22.07.2024 முதல் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை பாராட்டி நல உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.35.40 இலட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணியினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, ரூ.6.58 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மணலி மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை மயானபூமியில் 250 நாட்டு மரக்கன்றுகள் நடும் பணியினைத் தொடங்கி வைத்து, மரக்கன்றினை நட்டார்.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 71வது வார்டு அலுவலகத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்து, முடிவுற்ற பல்நோக்குக் கட்டடம் மற்றும் குழந்தைகள் மைய திட்டப்பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையிலான குழுவினர், தெலுங்கானா மாநிலம், பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் குப்பை கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்து இன்று (24.04.2025) பார்வையிட்டனர்.