பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (16.11.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (16.11.2025) செல்லப் பிராணிகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (15.11.2025) ஒரு நாள் மட்டும் 111 இடங்களிலிருந்து 53.83 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
அண்ணாநகர் ரவுண்டானா சாலையில் சென்னை மாநகர மக்களின் உடல் நலம் பேணும் வகையில் நடைபெற்ற Get Fit Chennai நடைபயணம் மற்றும் மிதிவண்டி பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி, மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. எச். ஆர். கெளஷிக்., இ.ஆ.ப., அவர்கள், இன்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கிழக்கு மாட வீதி மற்றும் வெங்கடாபுரத்தில் ரூ.99.41 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும், தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்திட வேண்டும் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய அலைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், துறைமுகம் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி 04.11.2025 அன்று முதல் தொடங்கி, பயிற்சி அளிக்கப்பட்ட 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தற்காலிக கொடிக் கம்பங்களை நடுவதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி அரசால், வழங்கப்பட்டுள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய அனுமதி பெற்றிட வேண்டும். இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (11.11.2025) ரிப்பன் கட்டட வளாகத்தில் வண்ண ரங்கோலி கோலமிடப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பான கணக்கீட்டுப் படிவம் 04.11.2025 முதல் 10.11.2025 (இரவு 8 மணி) வரை 16,35,596 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண ரங்கோலி கோலமிட்டும், வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட நேர்மை நகர் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் தாங்கல் மற்றும் ஜி.கே.எம்.காலனி மயானபூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (09.11.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் நடைபெற்ற செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வாயிலாக 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப்பிங் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது.