பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பேருந்து பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இதுவரை 614 பேருந்து நிழற்குடைகளில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் உதவி செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமானப் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட குழந்தைகள் மையத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0-வின் ஒரு அங்கமாக, இரண்டாம் கட்ட கழிப்பறை நடைபயணம் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி நடைபெற்றது.
சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0-வின் ஒரு அங்கமாக, உரிமை, தேவை மற்றும் அனைவருக்கும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் விழிப்புணர்வு வட்டமேசை கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில், சாலையோர வியாபாரத்தினை ஒழுங்குபடுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நகர விற்பனைக் குழு அமைப்பதற்கான தேர்தல் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0-வின் ஒரு அங்கமாக, கழிப்பறை நடைபயணம் இன்று திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் கட்டடங்களைஇணைத்திடும் சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்காண்டு சாதனை புகைப்படக் கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் இன்று பார்வையிட்டனர்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடம், சமூக நலக்கூடம் மற்றும் கால்வாய் புனரமைப்பு, Eco Blocks மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலத்தில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களுக்கு நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட பூங்கா இருக்கைகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று வழங்கினார்கள்.