பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்று (25.03.2026) இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,36,100/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ௲ 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/இணை ஆணையாளர் (கல்வி) திருமதி க. கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிமம் பெறாமல் நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளில் விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.உரிமம் பெறப்படாத மற்றும் விதிமீறல் விளம்பரப் பலகைகளை அமைத்தால் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 28.03.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்று (24.03.2026) இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 23,32,600/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், விழிப்புணர்வு இயக்கப் பலகையில் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்று (23.03.2026) இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 7,67,940/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் ௲ 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களை முதல் சுழற்சி (1st Randomizations) முறையில் தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026-னை முன்னிட்டு, முதல்நிலை சரிபார்த்தல் நிறைவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தங்களது வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும்பொருட்டு கணினி குலுக்கல் முறையில் சுழற்சிக்கு உட்படுத்தி முதல் சமவாய்ப்பிற்கு உட்படுத்தும் (Randomisation) நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தலைமையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் திரு.வீரேந்திர குமார், இ.ஆ.ப., (Mr. Virendra Kumar, I.A.S.,) அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஊடகக் கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று (23.03.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் திரு.கன்ஷியாம் தோரி, இ.ஆ.ப., (Mr.Ghanshyam Thori, I.A.S.,) அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காவல் துறை மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் 21.03.2026 முதல் 22.03.2026 வரை 2 நாட்களில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60,63,000/- ரொக்கப் பணம் மற்றும் மதுபானம் 4.2 லிட்டர், போதைப்பொருள் 28 கிராம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகம் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பெசன்ட் நகர் கடற்கரையில், வாக்காளர்கள் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பாரா க்ளைடிங் மூலம் வானில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நிகழ்ச்சியினை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் தெற்கு வட்டார ஆணையாளர் திரு.அஃதாப் ரசூல் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் 19.03.2026 முதல் 20.03.2026 வரை 2 நாட்களில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.57,55,195/- ரொக்கப் பணம் மற்றும் 12.85 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பப் படிவம் 12D வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் தேர்தல் விண்ணப்பப் படிவம் 12D-யைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அனுமதிக்கப்படாத நேரத்தில் திறக்கப்பட்டிருந்த மதுபானம் பார் குறித்து வரப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, சீல் வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.பவன் லால் மீனா, இ.வ.ப., (Mr. Bhavan Lal Meena (IRS (C & CE)) அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி ஐ.வளர்மதி அவர்கள் முன்னிலையில், காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (19.03.2026) தேனாம்பேட்டை மண்டல அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விக்டோரியா பொது அரங்க கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் 16.03.2026 முதல் 18.03.2026 வரை 3 நாட்களில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,94,92,820/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.