இன்று (29.06.2024) பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை அபித் காலனியில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற கண் பரிசோதனை முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
தூய்மையான கடற்கரையின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற கழிவு மேலாண்மை மற்றும் கடலோர தூய்மை செயல்பாட்டினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாயுமானவர் திட்டம் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற துறை மாவட்ட நிலை அலுவலர்களுக்கான புரிந்துணர்வுப் பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் தெருநாய் கடித்ததினால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுவனை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (18.06.2024) நேரில் சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் அச்சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார்.