மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், அண்ணாநகர் மண்டலம், வார்டு-106, எம்.எம்.டி.ஏ.காலனி பிரதான சாலை, தபால் நிலையம் அருகில் “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நெசப்பாக்கம் மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், பொதுமக்கள் ஏ.வி.எம். மற்றும் அன்னைசத்யா நகர் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளுக்காக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர 12.03.2025 முதல் 21.03.2025 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வில்லிவாக்கம் பகுதியில் ரூ.1.48 கோடி மதிப்பில் கோசாலை மையம் அமைப்பதற்கான பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2024-25ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
சர்வதேச மகளிர் தின விழா மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் திரு. மா. வெங்கடேசன் அவர்கள் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட கதிர்வேடு மற்றும் கடப்பா சாலை ஆகிய மயானபூமிகளில் புதியதாக எரிவாயு தகனமேடை கட்டப்படவுள்ளதால், பொதுமக்கள் புழல் மற்றும் விநாயகபுரம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக கூடுதலாக 57 புதிய வாகனங்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.