பெருநகர சென்னை மாநகராட்சி, கண்ணம்மாபேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செல்லப் பிராணிகளுக்கான நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், பெரம்பூர், சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 604 மாணவியருக்கு மிதிவண்டிகளையும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பயிலும் 846 மாணவியர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி பயிர் வகைகளையும் வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலம் 30.01.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 24.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 25.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களிலும் 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (18.01.2026) நடைபெற்றது.
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, "என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (18.01.2026) நடைபெற்றது.
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, "என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (18.01.2026) நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைப் பகுதிகளில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 241 நபர்களுக்கு ரூ.1,90,500/- அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 1,871 நபர்களிடமிருந்து 707.50 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இன்று (17.01.2026) ஒரு நாள் மட்டும் 94 இடங்களிலிருந்து 46.94 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் 14.01.2026 முதல் 16.01.2026 வரை 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நாளை (18.01.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் 18.01.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா இன்று (14.01.2026) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாதவரம் மற்றும் மணலி ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படகு குழாமினைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்து, படகு சவாரி மேற்கொண்டார். மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் மொத்தம் ரூபாய் 39.78 கோடி மதிப்பீட்டில் 5 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-76, செல்லப்பா முதலி தெருவில் ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் சென்னை தொடக்கப் பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அப்துல் ரசாக் தெருவில் சிங்கார சென்னை 2.0 நிதியில் ரூ.23.13 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் காய்கறி அங்காடி கட்டும் பணியினை இன்று (12.01.2026) அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று (12.01.2026) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிகர்கள் தொழில் உரிமத்தினை, உரிமக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதுப்பித்துக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலைத்துறை துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.