சென்னை மாவட்டத்தில் 6 கட்சிகளுக்கு நோட்டீஸ் விளக்கம் அளிக்க தேர்தல் அதிகாரி உத்தரவு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (26.08.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை மேல்நிலைப்பள்ளிகளில், 2025-26ஆம் கல்வியாண்டில் ஏற்பட்டுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை அலகு விட்டு அலகு மாறுதல் வழியாக நிரப்பிட 26.08.2025 முதல் 02.09.2025 வரை (6 நாட்கள்) விண்ணப்பங்களை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அனுப்பிட தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் WhatsApp வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர் பிரியா அவர்கள் இன்று (25.08.2025) தொடங்கி வைத்தார்.
சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர் பகுதியில் பணிக்குச் செல்லும் வழியில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்த தூய்மைப் பணியாளர் திருமதி வரலட்சுமி அவர்களின் உடலுக்கு மாண்புமிகு மேயர் திருமதி ஆர் பிரியா அவர்கள், இன்று (23.08.2025) மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் (Storm Water Drain) பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மழைநீர் வடிகால் பணிக்காக மண் தோண்டப்பட்ட இடங்களில் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி முறையான தடுப்புகள் (Barricades) அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (23.08.3025) மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்கள், சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர் பகுதியில் வசித்து வந்த தூய்மைப் பணியாளர் திருமதி வரலட்சுமி அவர்கள் தூய்மைப் பணிக்காகச் செல்லும் வழியில் மின்சாரம் தாக்கி இறந்ததை முன்னிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 20 இலட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (22.08.2025) அதிகாலை பெய்த மழையினைத் தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம் கே. கே. சாலைப் பகுதியில் உள்ள எம்ஜிஆர் கால்வாயில் வரும் நீரோட்டத்தில் குப்பை கழிவுகள் அதிகமாகி, அதன் காரணமாக அருகில் உள்ள பச்சையப்பன் தெருவில் தண்ணீர் வந்ததாக காலை 7 மணி அளவில் அப்பகுதி மக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர். கால்வாயில் உள்ள குப்பைக் கழிவுகள் மாநகராட்சிப் பணியாளர்களால் காலை 11 மணிக்குள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 31.08.2025க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் 23.08.2025 அன்று நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (22.08.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (22.08.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (21.08.2025) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சைதாப்பேட்டை தாதண்டர் நகர் அருகில் உள்ள மாம்பலம் கால்வாயில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிக்காக ரூபாய் 7.43 கோடி மதிப்பீட்டில் மூன்று புதிய ஆம்பிபியஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்களை இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (20.08.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தொடர்ந்து சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 60 மாணவர்களின் கல்விச்சுற்றுலாவினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (19.08.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.