பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேளிக்கை வரி சட்டம் 2017-ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் 01.07.2017 முதல் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கேளிக்கைகள் வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 24/2025), பிரிவு 2 (8) மற்றும் 3 (10) கீழ் பின்வருமாறு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 17.04.2025 முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாவட்ட அரசிதழ் எண்.172 ௲ன் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் அல்லது ஓட்டேரி மயானபூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு இலட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் நிகழ்வினைத் தொடங்கி வைக்கும் விதமாக, மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தலைமையில் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (04.06.2025) நடைபெற்றது.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கோடம்பாக்கம் மண்டலம், வடபழனி, அம்மன் கோவில் தெருவில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்காவினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட நேர்மை நகர் மயானபூமியின் தகனமேடையில் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தாங்கல் மயானபூமியினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திருவொற்றியூர் மண்டலம், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை இருப்புப் பாதை வழியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இரயில்வே மேம்பாலத்தின் மாற்றுப் பாதையான எர்ணாவூர் பாலம் மற்றும் மாட்டு மந்தை பாலம் ஆகியவற்றை பயன்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட சீதாராம் நகர் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் முல்லை நகர் மயான பூமியினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தலைமையில் சர்வதேச கழிப்பறை திருவிழா 04.06.2025 அன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட அரும்பாக்கம் இந்து மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் அல்லது வேலங்காடு மயானபூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26ஆம் கல்வியாண்டில் திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் திரு.வி.க.நகர் மண்டலம், குக்ஸ் சாலை சென்னை தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.

மணலி மண்டலம், காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 28.5.2025 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.

திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட நேர்மை நகர் மயானபூமியின் தகனமேடையில் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தாங்கல் மயானபூமியினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2024-25ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு நிகழ்நிலையில் (Online System) அனுமதி வழங்கும் நடவடிக்கை இன்று (21.05.2025) முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The issuance of licences for the erection of hoardings are being issued by Greater Chennai Corporation in GCC limits. Previously, applications were received, processed and approvals granted through offline method.

தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கைலாசபுரம்-மயிலாப்பூர் இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் கிருஷ்ணாம்பேட்டை மயானபூமியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும் பொழுது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி இன்று (16.05.2025) மாநகராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் நடைபெற்றது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை பள்ளி கல்வி வளர்ச்சி நிதிக்காக இன்று வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 81 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும் பொழுது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நாளை (16.05.2025) மாநகராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் நடைபெற உள்ளது.