மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26ஆம் கல்வியாண்டில் திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் திரு.வி.க.நகர் மண்டலம், குக்ஸ் சாலை சென்னை தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.