வருவாய்த் துறையானது பெருநகர சென்னை மாநகராட்சி யில் உள்ள துறைகளில் மிக முக்கியமான துறையாகும். ஆரம்பம் முதலே பெருநகர சென்னை மாநகராட்சி க்கு சொத்துவரி மூலம் முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக இத்துறை உள்ளது. சொத்துக்களின் எண்ணிக்கை அதிகமாவதால், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி வசூல் ஏறுமுகமாகவே அமைகிறது. சொத்துவரி வசூல் பணியுடன், தேர்தல்கள்(நாடாளுமன்ற/சட்டமன்ற/உள்ளாட்சி அமைப்பு) தொடர்பான பணிகளையும், வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரித்தல் பணிகளிலும், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணிகளிலும் உதவி புரிகிறது. புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயங்களில் இத்துறை உதவிபுரிகிறது.
சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு எண்.98 முதல் 109 வரையில் வழங்கப்பட்டுள்ள வழிவகையின்படியும், அட்டவணை-4ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியும் இத்துறையின் செயல்பாடுகள் அமைகின்றன.
கீழ்கண்ட இனங்கள் இத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது
- சொத்துவரி
- தொழில் வரி
- மர வரி
- கம்பெனி வரி
- விளம்பர வரி
- தொழில் உரிமம்
- பல்வகை
இத்துறையின் அலுவலர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு: |