கல்விச் சுற்றுலாவாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சென்னைப் பள்ளி மாணவ / மாணவியர்கள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களை (22.06.2018) அன்று சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் திரு.ஹர்மந்தர் சிங்,இ.ஆ.ப., அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப.,அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் கல்வி அலுவலர் திரு.இ.கோவிந்தசாமி, கூடுதல் கல்வி அலுவலர், உதவிக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|