பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் 22.07.2025 அன்று 6 வார்டுகளில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தன்னார்வலர்கள் மூலமாக இந்த 6 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று 13 அரசுத் துறைகளின் வாயிலாக 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (11.07.2025) தொடங்கி நடைபெறவுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்

இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs ) முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது

வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் 18.07.2025 அன்று 6 வார்டுகளில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தன்னார்வலர்கள் மூலமாக இந்த 6 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று 13 அரசுத் துறைகளின் வாயிலாக 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (10.07.2025) தொடங்கி நடைபெறவுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வார்டு-139 மற்றும் 142க்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை இன்று (09.07.2025) தொடங்கி வைத்தார்.

மெரினா நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், 11.07.2025 முதல் 31.07.2025 வரை (20 நாட்கள்) இயங்காது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் 17.07.2025 அன்று 6 வார்டுகளில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தன்னார்வலர்கள் மூலமாக இந்த 6 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று 13 அரசுத் துறைகளின் வாயிலாக 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (09.07.2025) தொடங்கி நடைபெறவுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 141க்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று (07.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் 15.07.2025 அன்று 6 வார்டுகளிலும் தொடங்கி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தன்னார்வலர்கள் மூலமாக இந்த 6 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று 13 அரசு துறைகளின் வாயிலாக 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (07.07.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை (07.07.205) இந்த 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்குகிறது.

சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0வின் ஒரு பகுதியாக, சென்னை பள்ளிகளில் பயிலும் 900 மாணவர்கள் பங்கேற்ற கழிப்பறை குறித்த பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகள் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகள் மற்றும் நீல வண்ணக்கொடி கடற்கரை சான்றிற்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியவுள்ள முதுநிலை மருத்துவர்களுக்கான சுகாதாரச் செயல்பாடுகள் குறித்த பயிற்சியினை இன்று தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 15.07.2025க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 வில் குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு இன்று நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு 2 மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இராயபுரத்தில் உள்ள கால்நடை காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், சாலை வெட்டு சீரமைப்புப் பணிகள், குளம் தூர்வாருதல் மற்றும் ஏரி புனரமைப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இராயபுரம் மண்டலத்தில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று திறந்து வைத்து, பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 21 நீர்வழிக்கால்வாய்களில் ரூ.211.86 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைத்தும், உயர்த்தியும், வலையுடன் கூடிய சங்கிலி வேலி அமைத்தும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று (26.06.2025) நடைபெற்ற சாலையோர வியாபாரிகள் தேர்தலில் மண்டலம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் அமைக்கப்படவுள்ள நகர விற்பனைக் குழுவிற்கான தேர்தல், நாளை (26.06.2025) நடைபெறவுள்ளது.