மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மணலி மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை மயானபூமியில் 250 நாட்டு மரக்கன்றுகள் நடும் பணியினைத் தொடங்கி வைத்து, மரக்கன்றினை நட்டார்.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 71வது வார்டு அலுவலகத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்து, முடிவுற்ற பல்நோக்குக் கட்டடம் மற்றும் குழந்தைகள் மைய திட்டப்பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையிலான குழுவினர், தெலுங்கானா மாநிலம், பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் குப்பை கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்து இன்று (24.04.2025) பார்வையிட்டனர்.

அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தில் ஏரியா சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உதவி மையங்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட பகுதிகளில் ரூ.44.97 இலட்சம் மதிப்பில் 3 புதிய திட்டப்பணிகளை மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கான உணவுக் கூடத்தினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களில் 1,00,118 மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு, பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள பிரித்தெடுக்கும் மையங்களில் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. கட்டடக் கழிவுகள் அகற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வருகின்ற 21.04.2025 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (11.04.2025) திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் அறிவியல் பூங்கா (Stem Park), ஏகாங்கிபுரத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம், சேமாத்தம்மன் திருக்கோவிலில் மண்டபம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய கால்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் பல்நோக்குக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள், கிண்டி மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் இரயில் நிலையங்களுக்கிடையில் ரூ.2.81 கோடி மதிப்பில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணியினை இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ.44.70 இலட்சம் மதிப்பில் 2 புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, புதிதாகக் கட்டப்பட்ட பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தினை இன்று (05.04.2025) திறந்து வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரியானது, பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த்தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஏ.வி.எம். மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த தகவல் கையேட்டினை வெளியிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் அடையாள அட்டைகளை வழங்கினார்.

CONSTRUCTION AND DEMOLITION (C&D) WASTE MANAGEMENT GUIDELINES

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை பகுதியில் கைப்பந்து மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் படிப்பகம் மற்றும் நூலகத்துடன் கூடிய பல்நோக்குக் கட்டடம் என மொத்தம் ரூ.43.34 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.