மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் வருகின்ற 21.10.2025 அன்று (செவ்வாய்க்கிழமை) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் வருகின்ற 21.10.2025 அன்று (செவ்வாய்க்கிழமை) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், ரூ.34.90 இலட்சம் மதிப்பில் பெரம்பூர் நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி பூங்கா அருகில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணியினையும், புதிதாக கட்டப்படவுள்ள மன்றக் கூடத்திற்கான இடத்தினையும் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக சேவைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று (16.10.2025) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க. நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விக்டோரியா பொது அரங்கம் புனரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த 19.07.2025 முதல் 11.10.2025 வரையிலான நாட்களில் 1 இலட்சத்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினை இன்று (14.10.2025) தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (13.10.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (12.10.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை வீட்டு வாசலில் சேகரிக்கும் சேவை இன்று (11.10.2025) நடைபெற்றது.

இன்று (11.10.2025) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள், அம்பத்தூர் மண்டலம், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் மில்லினியம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து, ரூபாய் 93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இறகுப் பந்து விளையாட்டு மைதானத்திற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், சென்னையின் வளர்ச்சிக்கான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையில், “நம்ம தங்கா” விழிப்புணர்வு சின்னத்தினை அறிமுகப்படுத்தினார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் 400 தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களின் பணியினைப் பாராட்டி, நலத்திட்ட உதவி தொகுப்புகளை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், புல்லா அவென்யூ, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (11.10.2025) நடைபெறவுள்ளது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைக்கும் விதமாக, மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை இன்று (10.10.2025) தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1.50 இலட்சம் பனை விதைகள் நடும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பாலவாக்கம் கடற்கரையில் இன்று (10.10.2025) தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, கடந்த 13 நாட்களில் 7,835 சாலைகளிலிருந்து 2,783 மெட்ரிக் டன் மண் மற்றும் மண் துகள்கள் அகற்றப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (10.10.2025) 8 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் சிட்கோ அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் புதிய இழுவிசை கூரையிலான 5 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகளை இன்று (9.10.2025) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் ரூ.59.80 இலட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, ரூ.1.38 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்து, நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (09.10.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் முதல்வர் மருந்தகத்தினை இன்று (08.10.2025) திறந்து வைத்தார்.