பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மக்கள் எளிதாக பயணம் செய்திடும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில், ரூ.276.75 கோடி மதிப்பீட்டில் 12 புதிய பாலங்களும், ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களில் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 14 பாலங்கள் மூலம் நாள்தோறும் சராசரியாக 18 இலட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.