பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகள், கருத்தரங்கங்கள், ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில், அரசாணை எண்.629, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 16.09.2025ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற்று, தற்காலிக கொடிக்கம்பங்கள் நடப்பட வேண்டும்.