திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட நேர்மை நகர் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் தாங்கல் மற்றும் ஜி.கே.எம். காலனி மயானபூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (09.11.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் நடைபெற்ற செல்லப்பிராணிகளுக்குவெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வாயிலாக 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப்பிங் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (08.11.2025) ஒரு நாள் மட்டும் 131 இடங்களிலிருந்து 45.98 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பான கணக்கீட்டுப் படிவம் 04.11.2025 முதல் 08.11.2025 (இரவு 8 மணி) வரை 10,39,737 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்ட தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி மைய எண்கள் விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், அசோக் நகரில் உள்ள டாக்டர் கே.கே. நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (08.11.2025) நடைபெறவுள்ளது.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள் ஆகியோர் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.82 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில் (09.11.2025, 16.11.2025, 23.11.2025 ) நடைபெறவுள்ளது.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள், அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவைக் கூடம் மற்றும் வாசிப்பு மண்டலத்தினை திறந்து வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி 04.11.2025 அன்று முதல் தொடங்கி, 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகள், கருத்தரங்கங்கள், ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில், அரசாணை எண்.629, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 16.09.2025ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற்று, தற்காலிக கொடிக்கம்பங்கள் நடப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக சென்னை மாவட்டத்தில் 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மாதவரம் மண்டலத்தில் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைத்தார். மேலும், ரெட்டேரி, புழல் உபரிநீர் கால்வாய் மற்றும் மணலி ஏரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (02.11.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (01.11.2025) ஒரு நாள் மட்டும் 137 இடங்களிலிருந்து 84.37 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,00,347 தெரு நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத், தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மாநகர மக்களின் உடல் நலம் பேணும் வகையில் நடைபெற்ற Get Fit Chennai நடைபயணம் மற்றும் மிதிவண்டி பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள், மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரையிலான சாலையில் சீரான போக்குவரத்தினை ஏற்படுத்துவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராயபுரம் மண்டலத்தில் நடைபெறவுள்ள, நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடித்திட வேண்டும் எனஅலுவலர்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், அறிவுறுத்தினார்.

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி. சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், ஆகியோர் பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.