சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.04.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள பீமனாம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும், குடிநீர் வசதிகள் குறித்தும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.04.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (19.04.2024) நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.,அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் டி. சுரேஷ், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று (20.04.2024) நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் சென்னை மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச வாகன வசதிகளைப் பெற Saksham App மூலமாகவும், மாவட்ட தகவல் மையத் தொடர்பு எண் 1950 அல்லது மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுபாட்டு அறை எண் 1800-425-7012 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பிரித்தனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observer’s) 18.04.2024 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக 18.04.2024 அன்று நடத்தப்படும் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தேர்தல் விழிப்புணர்வு இட்லி கண்காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.04.2024) மெரீனா கடற்கரையில் தொடங்கி வைத்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024னை முன்னிட்டு, தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் காமராஜர் காலனி சென்னை நடுநிலைப் பள்ளி விளையாட்டுத் திடலிலிருந்து நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.